
'சூர்யவன்ஷி' திரைப்படத்துக்காகத் தனது 'ஆந்திம் தி ஃபைனல் ட்ரூத்' திரைப்பட வெளியீட்டை தீபாவளி அன்று திட்டமிடாமல் சல்மான் கான் பின்வாங்கியுள்ளார்.
அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து கடந்த ஆண்டிலிருந்தே வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment