Skip to main content

Featured

முதல் பார்வை - நாய் சேகர் | திரைக்கதை மேஜிக் இல்லா குழந்தைகள் சினிமா!

ஐடி ஊழியரான சேகருக்கு (சதீஷ்) சிறுவயது முதலே நாய்கள் என்றால் வெறுப்பு. தன்னோடு பணிபுரியும் பூஜாவை (பவித்ரா லட்சுமி) ஒருதலையாக காதலிக்கிறார் சதீஷ். இதனிடையே சதீஷின் பக்கத்து வீட்டுக்காரரான விஞ்ஞானி ராஜராஜன் (ஜார்ஜ்) பல்வேறு விலங்குகளில் டிஎன்ஏ குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். ஒருநாள் அவரது ஆராய்ச்சி விலங்கான படையப்பா என்ற நாய் சதீஷை கடித்து விடுகிறது. இதனால் நாயும் பண்புகள் சதீஷுக்கும், மனிதனின் பண்புகள் அந்த நாய்க்கும் வருகின்றன. இதனையடுத்து சதீஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் பவித்ரா சதீஷை தன் வீட்டுக்குப் பெண் கேட்டு வரச் சொல்கிறார். பெண் கேட்டுச் செல்லும் இடத்தில் பவித்ராவின் தந்தையை கடித்து வைத்து விடுவதால் அவரது திருமணம் தடைபடுகிறது. வேலை செய்யும் இடத்திலும் சதீஷுக்கு சில பிரச்சினைகள் உருவாகிறது. அவர் தன்னுடைய பிரச்சினைகளிலிருந்து மீண்டாரா என்பதே ‘நாய் சேகர்’ படத்தின் கதை.

தொடக்கத்திலேயே “காமெடி படத்தில் லாஜிக் பார்க்காதீர்கள்” என்ற கண்டிஷனோடு படம் துவங்குகிறது. ஒரு நாயின் குணங்கள் மனிதனுக்கு தோன்றினால் என்னவாகும் என்ற ஒரு சின்ன ஒன்லைனரை எடுத்துக் கொண்டு அதை 2 மணி நேர சினிமாவாக போரடிக்காமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். படத்தின் முதல் அரை மணி நேரம் ஒரு பெரும் சோதனை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு ஆரம்ப காட்சிகள் முழுவதும் சிரிப்பே வராத வறட்டு ஜோக்குகளை நிரப்பி வைத்திருக்கின்றனர். அதிலும் மனோபாலாவிடம் சதீஷ் சொல்லும் ‘வைஃபை - வொய்ஃப்’ வசனங்கள் எல்லாம் படு அருவருப்பு. அதே போல ‘ஐஐடி - இருளாண்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ ‘ஜிஇசி - கோவிந்தம்மாள் இன்ஜினியரிங்க் காலேஜ்’ ஆகியவை எல்லாம் காமெடி என்று அவர்களாக நினைத்துக் கொண்டார்கள் போலும். இது போன்ற வசனங்களை எல்லாம் சுயபகடி செய்வது போல ‘இன்னுமா இதையெல்லாம் காமெடின்னு சிரிச்சிட்டு இருக்கீங்க’ என்று படத்தில் ஒரு வசனம் வைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts