Skip to main content

Featured

முதல் பார்வை | கள்ளன் - சொல்லவந்த விஷயம் ஓகே... ஆனால் சொன்ன விதம்?

மனித மனங்களில் ஒளிந்திருக்கும் குரூரம் என்ன மாதிரியான செயல்களை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துவதே 'கள்ளன்'.

வேட்டைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வேலு (கரு.பழனியப்பன்) 'பணத்துக்காக வேட்டையாடாதே, பசிக்காக வேட்டையாடு' என்று கூறும் தந்தையின் (வேல.ராமமூர்த்தி) சொல்லை வேதவாக்காக கொண்டு வேட்டையாடி பிழைக்கிறார். அரசாங்கம் வனவிலங்குகளை வேட்டையாட தடைபோட, வேலை இல்லாமல் இருக்கும் வேலு நண்பர்களின் அறிவுரைபடி தவறான பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். முதலில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் அவரின் குற்றங்கள், கொலை அளவுக்கு செல்கிறது. இடையில் காதல் மலரும் வேலுவுக்கு, காதலியுடன் சேர்ந்து வாழ, செய்யும் குற்றங்கள் என்ன நிலையை ஏற்படுத்துகிறது என்பதை விவரிப்பதே 'கள்ளன்' கதையும் திரைக்கதையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts