
தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல்வேறு மொழிகளில் 1,500 படங்களுக்கு இசையமைத்த அவருக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாக கேரள அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில், கலைத்துறையின் கலைகளில் சிறந்த விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment