Skip to main content

Featured

குழந்தையின் பெயரை அறிவித்த ஜாய் கிரிசில்டா: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை!

தனது குழந்தையின் பெயரை ஜாய் கிரிசில்டா அறிவித்திருக்கும் பதிவு, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை மாதம்பட்டி ரங்கராஜ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் காவலர் - மருந்து, பணம் அனுப்பிய ராம் சரண்

ஹைதராபாத்: 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ராம்சரண் ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் பாதுகாவலர் ஒருவருக்கு மருந்துபொருட்கள் அனுப்பி உதவியுள்ளார்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சில காட்சிகள் உக்ரைன் மற்றும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இதற்காக உக்ரைனில் ராம்சரண் தங்கியிருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் உக்ரைனைச் சேர்ந்த ரஸ்டி என்பவர். இதனிடையே, ரஷ்ய ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரைனில் சண்டை மூண்டுள்ள நிலையில், அதில் ரஸ்டி குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் மூண்டதும் ரஸ்டியை பற்றி கவலையடைந்த ராம் சரண், அவரைத் தொடர்புகொண்டு நிலவரத்தை கேட்டறிந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments