
பெங்களூரு: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த புனித் ராஜ்குமார் வாழ்க்கை அம்மாநில பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பல்வேறு கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' 'அப்பு' என்று அழைக்கப்பட்டவர், கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் மரணம் கன்னட திரையுலகினர் மட்டுமில்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்கள் முன் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment