Skip to main content

Featured

திரை விமர்சனம்: கே.ஜி.எஃப் 2

‘கே.ஜி.எஃப்’ எனும் தங்கச் சுரங்கசாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வரும் கருடன் என்பவனை கொல்லும் அசைன்மென்ட்டை, ‘ராக்கி’ எனும் தாதாவிடம் கொடுக்கின்றனர் கருடனின் சகாக்கள். அதற்காக தங்கச் சுரங்கத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் தொழிலாளிபோல ஊடுருவுகிறான். கொத்தடிமைகளின் கொட்டடியாகவும், தப்பிச் செல்ல முடியாத கொடுஞ் சிறையாகவும் அச்சுரங்கம் இருப்பதைப் பார்த்து, அந்த மக்களுக்காக மனம் இரங்குகிறான். அவர்களது நம்பிக்கையைப் பெறும் அவன், சரியான சந்தர்ப்பத்தில் கருடனைக் கொலை செய்வதுடன் முடிந்துவிடுவதாக முதல் பாகத்தின் கதை அமைக் கப்பட்டிருந்தது.

‘கே.ஜி.எஃப்’ சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் ராக்கி, கருடனின் சகாக்களுக்கு எதிரியாகிறான். இதன் பிறகு ராக்கி எதிர்கொள்ளும் புதிய சவால்கள், அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதம், இறுதியில் ராக்கி தனது அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினானா, இல்லையா, அவனது நிலை என்ன ஆனது என்பதை சொல்கிறது இரண்டாம் பாகத்தின் கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts