Skip to main content

Featured

'வெளிநாட்டு படங்களை இந்தியாவில் படம்பிடிக்க 2 சலுகை திட்டங்கள்' - கேன்ஸ் விழாவில் மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படம் பிடிப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பதற்கான 2 திட்டங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (புதன்கிழமை) அறிவித்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘மார்ச்சே டு பிலிம்’-ல் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படம் பிடிப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பதற்குமான 2 திட்டங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிவித்தார். ஒலி-ஒளி இணை தயாரிப்புக்கான ஊக்குவிப்புத் திட்டம், வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டம் என, இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts