Skip to main content

Featured

'நான் சொன்னதும் ஓகே சொல்லிவிட்டார்' - டிமான்டி காலனி 2-க்காக இணைந்த அருள்நிதி, அஜய்ஞானமுத்து 

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர்.

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'டிமான்டி காலனி'. த்ரில்லர் படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, 'இமைக்கா நொடிகள்' மற்றும் விரைவில் வரவிருக்கும் 'கோப்ரா' போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts