Skip to main content

Featured

'மொழி பிரச்சினை குறித்து உச்ச நடிகர்கள் பேசுவதில்லை' - இயக்குநர் அமீர்

இந்திய திரையுலகில் இந்தி மொழி குறித்த சர்ச்சை நீண்டுகொண்டே செல்கிறது. தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்ஜீவி சினிமாவில் இந்தி மொழி ஆதிக்கம் குறித்து தனது கவலையை சில தினங்கள் முன் வெளிப்படுத்தி இருந்தார். இப்போது, தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகை சுஹாசினி இந்தி மொழி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "நடிகர்கள் அனைத்து மொழிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மொழிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தி நல்ல மொழியே. இந்தி பேசுபவர்கள் நல்லவர்களே. அவர்களிடம் நாம் பேச வேண்டும் என்றால் அவர்களின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்பது போல் பேசியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments