
சென்னை: வயிற்றில் லேசான ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக அவர் மகன் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment