Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துணைக் கண்டத்திலிருந்து இதுவே முதல் - கேன்ஸில் விருது வென்ற பாகிஸ்தானிய படம்

அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய பாகிஸ்தானிய படமான 'ஜாய்லேண்ட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அன் சர்டைன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் ஜூரி விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக பாகிஸ்தானிய படம் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உயரிய விருதாக கருதப்படும் 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவின் ஜூரி விருதுக்கு இத்தாலிய தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகையுமான வலேரியா கோலினோ தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments