Skip to main content

Featured

சினிமா தயாரிப்பாளர் ஏக்நாத் காலமானார்

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரும், வீடியோ நிறுவன உரிமையாளருமான ஏக்நாத் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

சென்னையில் வீடியோ கேசட் நிறுவனம் நடத்தி வந்தவர் ஏக்நாத். பல திரைப்படங்களின் வீடியோ உரிமையை பெற்று, கேசட்களை வெளியிட்டு வந்தார். ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். கே.பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’, ராம்கி நடித்த ‘வெள்ளையத்தேவன்’, கஸ்தூரி ராஜா இயக்கிய ‘மெளன மொழி’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வந்தவை. கமல்ஹாசனின் ‘இந்திரன் சந்திரன்’ உட்பட பல படங்களை மொழி மாற்றம் செய்தும் வெளியிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts