Skip to main content

Featured

'எல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளது' - திரைப்பயணத்தில் 19 ஆண்டுகள் நிறைவுசெய்த ஜெயம் ரவி நெகிழ்ச்சி

அண்ணனின் 'ஜெயம்' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றியான நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. பல நல்ல படைப்புகளை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் உருவெடுத்துள்ளார். அவர் சினிமாவில் நுழைந்தது இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து திரைப்பயணத்தில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் முதல் படமான ஜெயம் படத்துக்குக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது. இந்த திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு நடிகன். அவர்கள் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே. எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts