Featured
- Get link
- X
- Other Apps
திரை விமர்சனம்: மாமனிதன்

கம்பம் நகரில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தும் கிராமத்து வெள்ளந்தி மனிதரான ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), தன் மகன், மகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்புகிறார். அதற்குஅதிக பணம் தேவைப்படும் என்பதால், மாதவன் (ஷாஜி சென்) என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வீட்டுமனைகளை விற்றுத் தரும் தரகு வேலையில் இறங்குகிறார். பணத்துடன் ஊரைவிட்டு ஓடுகிறார் மாதவன். நேர்மைக்கு பெயர்பெற்ற ராதாகிருஷ்ணனை ஒரே இரவில் மோசடிக்காரனாக பார்க்கின்றனர் ஊரார். இதனால், அவரும் தலைமறைவாகிறார். ஊர் மக்களிடம் சிக்காமல் இருக்க ராதாகிருஷ்ணன் எடுக்கும் முடிவும், அவரது எஞ்சிய வாழ்க்கையும்தான் கதை.
விஜய் சேதுபதியுடன் இயக்குநர் சீனுராமசாமி இணைந்திருக்கும் 4-வது படம். மோசடிக்காரர்களை கண்மூடித்தனமாக நம்பி வீழ்ந்த பிறகு, நாயகன் சந்திக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதை சொன்ன விதத்தில் தனக்கே உரிய முத்திரையை பதிக்கிறார் இயக்குநர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment