Skip to main content

Featured

“எனக்கு உலகை காட்டிவிட்டு, அவர் சென்றுவிட்டார்” - ‘அய்யப்பனும் கோஷியும்’ நஞ்சியம்மா பின்னணி

மலையாளத்தின் வெற்றிபெற்ற திரைக்கதையாசிரியர்களில் ஒருவர் சச்சி. அவரை இயக்குநராகவும் வெற்றிபெறச் செய்த படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. பிஜுமேனனும் பிருத்விராஜ் சுகுமாரனும் அய்யப்பனும் கோஷியுமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ''களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்'' என்ற பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் (பெண்) பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது.

தமிழகம் - கேரள எல்லையான அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சியம்மா. தமிழகப் பழங்குடியான இவருக்கு தாய் மொழி தமிழே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி கேரள வசம் சென்றது. இதனால், அட்டப்பாடி தமிழகப் பழங்குடி மக்களின் மொழி மெல்ல மாறத் தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டு எழுதவும் படிக்கவும் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts