Skip to main content

Featured

மேற்குவங்க ஊழல் வழக்கில் கைதான நடிகை அர்பிதாவை விசாரிக்க அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 22-ம் தேதி கொல்கத்தாவில் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்து ரூ.22.5 கோடி ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம், ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அமைச்சரிடம் 2 நாள் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts