Skip to main content

Featured

தேஜாவு: திரை விமர்சனம்

சுப்ரமணியன் என்கிற புனைக்கதை எழுத்தாளர் தனது கதையில் அவர் எழுதும் சம்பவங்கள் அப்படியே நிஜத்திலும் நடக்கின்றன. இதுபற்றி போலீஸில் அவர் புகார் கொடுக்க, காவல் துறைஅலட்சியப்படுத்துகிறது. எழுத்தாளரின் கதையில் வருவதுபோல பூஜா (ஸ்மிருதி வெங்கட்) என்கிற பெண்ணை முகமுடி அணிந்த மூவர் கடத்திச் செல்கின்றனர்.

கடத்தப்பட்டவர், காவல் அதிகாரியின் (மதுபாலா) மகள் என்பதால், தகவல் வெளியே தெரியாமல் இருக்க, விக்ரம் குமார் (அருள்நிதி) என்ற ரகசிய அதிகாரியை நியமித்து விசாரணையை தொடங்குகின்றனர். கடத்தப்பட்ட பூஜாவுக்கு என்ன ஆனது? விக்ரம்குமாரால் பூஜாவை கண்டுபிடிக்க முடிந்ததா? கதையில் எழுதப்படுவது நிஜத்தில் நடப்பதன் மர்ம பின்னணி என்ன என்பதுதான் கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts