Skip to main content

Featured

கணம்: திரை விமர்சனம்

இசைக் கலைஞன் ஆதி (சர்வானந்த்), வீட்டு புரோக்கர் பாண்டி (ரமேஷ் திலக்), தனது திருமணத்துக்குப் பெண் தேடும் கதிர் (சதீஷ்) மூவரும் நண்பர்கள். இளமையிலேயே அம்மாவை இழந்த ஆதிக்கு ஒரு ஏக்கமும், மற்ற இருவருக்கும் தனிப்பட்ட அபிலாசைகளும் இருக்கின்றன. இந்த நேரத்தில் கால இயந்திரத்தை உருவாக்கிய ரங்கி குட்டப்பாலை (நாசர்)சந்திக்கிறார்கள். ‘காலம் உங்களுக்கு மறுத்த இரண்டாவது வாய்ப்பை, என் கால இயந்திரம் உங்களுக்குத் தரும். அதன் மூலம் கடந்த காலத்துக்குப் பயணித்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்; என் விரும்பம் ஒன்றையும் நிறைவேற்றித் தாருங்கள்’ என்கிறார். அதை ஏற்று கடந்த காலத்துக்குப் பயணிக்கும் மூவரும் அங்கே யாரையெல்லாம் சந்திக்கிறார்கள்? மாற்ற விரும்பினார்கள்? குட்டப்பாலின் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? என்பது கதை.

வாழ்க்கையின் போக்கில் நிகழ்ந்துவிடும் பல முக்கியச் சம்பவங்கள், இழப்புகளை மாற்றியமைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த ஏக்கத்தை சாத்தியமாக்கும் கற்பனைக்கு ‘தாய்மை’ எனும் உலக உணர்வின் வழியாக உயிர்கொடுக்க முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக். வாழ்க்கையின் அர்த்தமும் அதன் ஆதார சுருதியும் நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்வதில்தான் இருக்கிறது என்கிற தத்துவத்தை உணர்வுகளால் கட்டியெழுப்பிய ‘கூஸ் பம்ப்’ காட்சிகளின் வழியாகச் சித்தரித்திருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts