Skip to main content

Featured

இளையராஜாவுடன் இசையிரவு 13 | ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...’ - மெய்சிலிர்த்து கண்விழிக்கும்  நள்ளிரவு நினைவுகள்!

அவனுக்கான அவளது நினைவுகளும், அவளுக்கான அவனது நினைவுகளும் தானே காதல். கண் இமைத்தலுக்கும், இதயம் துடிப்பதற்குமான இடைவெளியைக்கூட விட்டுவைக்காமல் காதல் நிரம்பிக் கிடக்கும் இத்தகைய தருணங்களில் எங்கிருந்தாவது, எப்படியாவது அவளது சிறு செருமல் கேட்டுவிடாதா என ஏங்கி காத்திருக்கிறது மனது. இதுபோல ஒரு சிச்சுவேஷன் அதுவும் ராகதேவனிடம் சிக்கினால் கேட்கவா வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'கோபுர வாசலிலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தாலாட்டும் பூங்காற்று நானல்லவா' பாடல்தான் அது. இப்பாடலை ஐயா வாலி எழுதியிருப்பார். ஆழ்மனதில் பெருகும் காதலின் ஏக்கம் தூக்கத்தை கெடுத்து சுடும் தீயாய், கொடும் நோயாய் பரவுதலை தனக்கே உரிய நடையில் எழுதியிருப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts