Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 வாக்கில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார். அவருக்கு வயது 50 என தெரிகிறது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் தான் சந்தானம். இவர் நடிகர் விஜயின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றிவயர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments