Skip to main content

Featured

இளையராஜாவுடன் இசையிரவு 16 | ‘அந்திமழைப் பொழிகிறது...’ - இளமையை சுமையாக்கும் இமைகள்!

41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இந்த உலகம் நிச்சயம் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஒரு சிறிய அளவிலான மாற்றமாவது நிச்சயம் நடந்தேறியிருக்கும். ஆனால், இசைஞானி இளையராஜாவின் இசையும், பாடல்களும் மட்டும் அது உருவானபோது, ரசிகர்களுக்கு எத்தகைய அவதானிப்புகளை தந்ததோ, கொஞ்சமும் மாறாமல் இன்று வரை அதே இளமையுடன் இருப்பது அதிசயிக்கத்தக்க ஆச்சரியங்களில் ஒன்று. ஞானம் பொதிந்த அவரது இசை குறிப்புகளும், அதை வார்த்து வடித்த பெரும் இசைக் கலைஞர்களின் கூட்டணியும், அவரது இசை கோர்ப்புகளை எப்போது கேட்டாலும் ஈர்க்க செய்கிறது. அந்த வகையில், இந்தப் பாடலும் பலரது ரிபீட் மோட் பாடல்தான்.

கடந்த 1981-ம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ராஜபார்வை’ படத்தில் இடம்பெற்ற 'அந்தி மழை பொழிகிறது" பாடல்தான். இந்தப் பாடலும் இசைஞானி இளையராஜா கவிப்பேரரசு வைரமுத்து காம்போவில் வந்த ஆல்டைம் பேஃவரைட் வகை பாடல்தான். பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து ஜானகி அம்மா பாடியிருப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts