Skip to main content

Featured

கலகத் தலைவன்: திரை விமர்சனம்

கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் திருமாறன் (உதயநிதி). அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனம் ஒன்றைத் தயாரிக்கிறது அந்நிறுவனம். ஆனால், அதிலிருந்து வெளியேறும் மாசு, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி இருக்கிறது. விஷயம் வெளியே கசிந்தால், தொழில் பாதிக்கும் என்பதால் ரகசியமாக வைக்கிறார்கள். ஆனால், வெளியில் கசிந்துவிடும் அந்த ரகசியம் பங்கு சந்தையில் எதிரொலிக்கிறது. தனது நிறுவன ரகசியத்தை வெளியே விட்டது யார் என்பதை கண்டுபிடிக்க அர்ஜுனை (ஆதவ்) நியமிக்கிறது அந்த நிறுவனம். அவர் எப்படி கண்டுபிடிக்கிறார், அதில் நாயகன் சிக்கினாரா, அவர் ஏன் அதைச் செய்தார் என்பது படம்.

எங்கோ ஒர் இடத்தில் கார்ப்பரேட் செய்யும் ஒரு விஷயம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும் கார்ப்பரேட்களின் அரசியலையும் புரியும்படி சொல்லி இருக்கிறார், இயக்குநர் மகிழ் திருமேனி. அவருடைய முந்தையப் படங்களைப் போலவே நாயகனுக்கும் அவரைத் தேடும் எதிர்மறை நாயகனுக்குமான பூனை - எலி ஆட்டம் இதிலும் தொடர்கிறது சுவாரஸ்யமாக. அதற்கு, இடைவேளைக்கு முன் வரும் அந்த ‘ரயில்வே ஸ்டேஷன்’ சேஸிங் அபார சாட்சி. அதுதான் இயக்குநர் மகிழின் மேஜிக்கும் கூட. திரைக்கதையில் அவர் பயன்படுத்தி இருக்கும் ‘நான் லீனியர்’ வடிவமும் ரகசியங்கள் ஒவ்வொன்றையும் கதையின் போக்கில் அவிழ்த்துச் செல்வதுமான உத்தி ரசிக்கும்படி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts