Featured
- Get link
- X
- Other Apps
எம்.ஜி.ஆர். ஏன் மக்கள் திலகம்? - கடந்த கால சுவாரசிய நினைவுகளில் மலர்கிறார் நடிகை லதா

எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யிடம் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘எம்.ஜி.ஆர் பற்றி....’ என்றதுமே சற்று உணர்ச்சிவசப்பட்டு சிறிதுநேரம் கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்த லதா, உற்சாகமாக ஆர்ப்பரித்துக் கொட்டிய குளுமையான நினைவுகளின் அருவி இதோ:
எனக்கு எம்.ஜி.ஆர்.தான் எல்லாமே.நடிக்க வந்தபோது நான் மிகவும் சிறியவள். வெளி உலகம் அதிகம் தெரியாது. எப்படி நடந்துகொள்ள வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும், பண்பு, மரியாதை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, கல்லாக இருந்த என்னை சிற்பமாகச் செதுக்கியவர் எம்.ஜி.ஆர்தான். எனது நிஜப் பெயர் நளினி. சினிமாவுக்காக ‘லதா’ என்று பெயர் வைத்ததே அவர்தான். என் வீட்டு பூஜையறையில் தெய்வங்கள், தாய், தந்தையுடன் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்து தினமும் வணங்குகிறேன். (பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்தைக் காட்டினார்).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment