Featured
- Get link
- X
- Other Apps
செம்பி: திரை விமர்சனம்

தனது பத்து வயது பேத்தி செம்பியுடன் (நிலா), கொடைக்கானல் மலைக்கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார் வீரத்தாய் (கோவை சரளா). காட்டுக்கு வரும் 3 வாலிபர்களால் செம்பி, கூட்டுப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக, இந்தச் சம்பவம் தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கிறது. விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி, பாலியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். அரசியல் புள்ளியின் மகனும் அவன் நண்பர்களும் இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் என்பது தெரியவருகிறது. அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார், வீரத்தாயிடம். போலீஸ் அதிகாரியைத் தாக்கிவிட்டு பேத்தியுடன் தப்பிக்கும் அவர், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தாரா, இல்லையா என்பதுதான் படம்.
செல்வாக்குமிக்கக் குற்றவாளிகள் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் நியாயங்களுக்கு உதவ, ஓராயிரம் கைகள் ஓடோடி வரும் என்ற நம்பிக்கையையும் கேள்விக் கேட்க வேண்டிய நேரத்தில் அமைதி காப்பது ஆபத்தானது என்பதையும் ‘செம்பி’யின் மூலம் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment