Skip to main content

Featured

ராங்கி: திரை விமர்சனம்

ஆன்லைன் மீடியாவில் பணியாற்றும் தையல்நாயகி (த்ரிஷா)யின் அண்ணன் மகள் சுஷ்மிதா (அனஸ்வரா ராஜன்). இவர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று இயக்கப்படுகிறது. அதில் இருந்து சுஷ்மிதாவை மீட்க நினைக்கும் தையல்நாயகி, அந்த போலி கணக்கின் மூலம் லிபியாவைச் சேர்ந்த தீவிரவாதி ஆலிமுடன் உரையாடத் தொடங்குகிறாள். சுஷ்மிதா என்று நினைத்து அவனும் பேசிக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து அந்நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாட விரும்பும் வல்லரசு நாடுகளின் முகவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் தையல்நாயகியும் சுஷ்மிதாவும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? ஆலிம் யார்? என்ற கேள்விகளுக்குவிடை சொல்கிறது மீதிக் கதை.

சமூக ஊடகங்களின் மூலம் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சர்வதேச எண்ணெய் வள அரசியலையும் தொடர்புபடுத்தி சுவாரசியமான கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு கச்சிதமான இரண்டு மணி நேரத் திரைக்கதையை அமைத்து ஆங்காங்கே மிகக் கூர்மையான வசனங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சரவணன். சுயசார்பும் சுதந்திர சிந்தனையும் தெளிவான சமூக அரசியல் பார்வையையும் கொண்ட நாயகியை மையப்படுத்தி இருப்பதும் மனதைக் கவர்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments