Skip to main content

Featured

வசந்த முல்லை: திரை விமர்சனம்

மென்பொருள் துறையில் பணியாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா), பணிச்சுமை தரும் பெரும் மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் உடல்நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சுற்றுலா முடித்து வரும் வழியில் உள்ள பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.

‘டைம் லூப்’ என்கிற கால வளையத்துக்குள் சிக்கி, திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீள முயலும் முதன்மைக் கதாபாத்திரங்களின் ‘ஜீவ-மரண’ போராட்டம் போல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா. உண்மையில் அது ‘கால வளைய’க் கருத்தாக்கம் இல்லை என்பதை நிறுவும் இறுதிக் காட்சியின் மூலம், இயக்குநர் தனது உயரிய சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts