Featured
- Get link
- X
- Other Apps
பத்து தல: திரை விமர்சனம்

கன்னியாகுமரியில் மணல் கொள்ளை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார், ஏ.ஜி.ராவணன் என்னும் ஏஜிஆர் (சிலம்பரசன்). தமிழ்நாடு முதல்வர் (சந்தோஷ் பிரதாப்) திடீரென மாயமாகிவிட, ஏஜிஆர் தேர்ந்தெடுக்கும் நபரே (ஒபிலி என்.கிருஷ்ணா) அடுத்த முதல்வராகிறார். மாயமான முதல்வரைக் கடத்தியது ஏஜிஆர்தான் என்ற சந்தேகத்தில், காவல்
துறையைச் சேர்ந்த சக்தி (கவுதம் கார்த்திக்), அவர் குழுவுக்குள் அடியாளாக ஊடுருவுகிறார்.
அவரின் கல்லூரிக் காதலியும் கன்னியாகுமரி தாசில்தாருமான லீலா தாம்ஸன் (பிரியா பவானி ஷங்கர்) ஏஜிஆரின் மணல்கொள்ளையைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார். முதல்வருக்குக் குடைச்சல் கொடுக்கும் துணை முதல்வர் நாஞ்சிலார் (கவுதம் வாசுதேவ் மேனன்) தனது சுயநலத்துக்காக, மணல்கொள்ளை எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு ஏஜிஆரின் செல்வாக்கை சரிக்க முயல்கிறார். மாயமான முதல்வர் என்ன ஆனார்? ஏஜிஆர் யார்? அவர் கோட்டைக்குள் நுழையும் சக்தியின் நோக்கங்கள் நிறைவேறியதா? என்பதற்கு விடை அளிக்கிறது மீதிக் கதை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment