Noir Kei Ninomiya Fall 2025 Ready-to-Wear: Beyond the Spectrum
Black light brought out a profusion of otherworldly colors in a lineup that telegraphed a joyful, wonder-filled exploration of the unknown. from Fashion
தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் (சிஐஐ), தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.சாமிநாதன், நடிகர் கார்த்தி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிஐஐ-யின் தென்மண்டல தலைவர் சத்யஜோதி தியாகராஜன், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சிஐஐ துணைத் தலைவர் ஆர். நந்தினி, வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி, மஞ்சு வாரியர், நடிகை சுகாசினி, இயக்குநர் பசில் ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது கூறியதாவது: கலைக்கு மொழியில்லை, எல்லை இல்லை என்று சொல்வார்கள். ஆனால், கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கிறது, கலாச்சாரம் இருக்கிறது. எல்லை இருக்கிறது. கலையை நுகர்வோர்களுக்குத்தான் அந்த எல்லைகள் இல்லை. அது எல்லையை கடந்து போகும். கரோனா காலத்தில் இதைப் பார்த்தோம்.
Comments
Post a Comment