Skip to main content

Featured

நான் தென்னிந்திய நந்திதா தாஸா? - 'அருவி' அதிதி பாலன்

‘அருவி’யில் தனித்துவப் பெண்ணை அடையாளம் காட்டிய அதிதி பாலன், தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில், கண்மணி ஆகி இருக்கிறார். மனித உணர்வுகளை இயல்பாக வெளிக்கொண்டு வரும் தங்கர்பச்சானின் இந்தப் படத்தில், பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரும் இயக்குநர்களுடன் நடித்தது சிறந்த அனுபவம் என்கிறார் அதிதி.

“இந்தப் படத்துல அழுத்தமான கேரக்டர்ல நடிக்கிறேன். போலீஸ்ல உயர்ந்த பதவியில் இருந்துட்டு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு இறங்கும் பாத்திரம். வழக்கமா தங்கர் சார் படங்கள்ல இருக்கும் எமோஷனல் விஷயங்கள் இதிலும் இருக்கும். ஒரு நடிகையா இது எனக்கு முக்கியமான படம். நடிப்பின் நுணுக்கங்களை பாரதிராஜா,கவுதம் மேனன் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்று தொடங்குகிறார் அதிதி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts