Skip to main content

Featured

‘மலையாள சினிமாவில் நடித்தால் தேர்ந்த நடிகைதான்’ - ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராய் லட்சுமி. கிளாமர் வேடங்களில் நடித்து வரும் அவர், இப்போது மலையாளத்தில் உருவாகும் ‘டிஎன்ஏ’ என்ற படத்தில், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தை டி.எஸ் சுரேஷ்பாபு இயக்குகிறார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இதில், அஸ்கர் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதில், அதிக மேக்கப் இல்லாமல் நடிக்கும் ராய் லட்சுமி, போலீஸ் அதிகாரிக்கான உடல் மொழியை கொண்டு வர அதிகப் பயிற்சி மேற்கொள்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments