Skip to main content

Featured

இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? - மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி

மும்பை: தனது இரண்டாவது திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றில் மனம் திறந்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி. இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி (60), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா (50) என்ற ஆடை வடிவமைப்பாளரை கடந்த மே 25 அன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் எளிய முறையில் வியாழக்கிழமை உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது. 60 வயதில் அவர் செய்து கொண்ட இரண்டாம் திருமணம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts