Skip to main content

Featured

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!

சென்னை: ’பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் 'பிசாசு 2' படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts