Skip to main content

Featured

மகேந்திரனின் அழகிய மனசாட்சியை பிரதிபலித்த சரத்பாபு - சில நினைவலைகள்

தமிழ் சினிமா ரசிகர்களின் நாஸ்டாலஜியை கிளறும் ஆல்டைம் பேஃவரைட் திரைப்படங்கள், அல்லது பிரபல இயக்குநர்கள், நடிகர்களின் வெற்றிப் படங்களை பட்டியலிட்டால், அத்திரைப்படங்களில் நடிகர் சரத்பாபு தவிர்க்க முடியாதவராக இருப்பார். அதிலும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு கொண்டு சேர்த்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் அழகிய மனசாட்சியாக சரத்பாபு திரையுலகில் அறியப்பட்டார். இயக்குநர் மகேந்திரனும் சரத்பாபுவை மனதில் வைத்தே குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை எழுதியதாகவும் கூறியிருக்கிறார்.

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் சரத்பாபு நடித்து வந்திருந்தாலும், 1978ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் சரத்பாபுவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts