Skip to main content

Featured

ஓடிடியின் வருகையை முன்கூட்டியே கணித்தவன் நான்: கமல்ஹாசன்

அபுதாபி: ஓடிடி தளங்களின் வருகையை பல ஆண்டுகளுக்கு முன்பே தான் கணித்ததாகவும், ஆனால் அப்போது தம்முடைய கூற்றை திரைத்துறை ஏற்கவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியானது. அப்போது திரைத்துறையில் யாரும் யோசிக்காத ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் கமல்ஹாசன். Direct-To-Home என்ற அந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கட்டணம் செலுத்தி வீட்டிலேயே டிஷ் டிவி மூலம் ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts