Skip to main content

Featured

தர வமரசனம: சரலஸ எனடரபரசஸ

குடும்பக் கோயிலில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வணங்கி வருகிறார், கணவர் குமாரசாமியை (குரு சோமசுந்தரம்) பிரிந்து வாழும்கோமதி (ஊர்வசி). அவருக்கு அதை வைத்து கோயில் கட்ட ஆசை. அவர் மகன் ரவிக்கு (பாலு வர்கீஸ்) மாலைக் கண் நோய் இருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுகிறது. அவருக்குத் தனியாகத் தொழில் தொடங்க விருப்பம். அதற்குப் பணம் தேவைப்படும் நேரத்தில், அவர் வீட்டில் இருக்கும் சிலை புராதனமானது என தெரிய வருகிறது. அதை விலை பேசுகிறது ஒரு கும்பல். முதலில் மறுக்கும்ரவி, ஒரு கட்டத்தில் சார்ல்ஸ் (கலையரசன்)உதவியுடன் அம்மாவுக்குத் தெரியாமல் திருடி, விற்க முடிவு செய்கிறார். அதை நிறைவேற்றினாரா? நினைத்தபடி தொழில் தொடங்க முடிந்ததா? அவர் அம்மாவின் கோயில் கனவு என்னவானது என்பது மீதிகதை.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் படம். சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதையை, கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். ஆனால், அதை சொன்னவிதத்தில் தடுமாற்றம். முதல் 45 நிமிடக் கதை எங்கெங்கோ சென்று, புராதன விநாயகர் சிலை, அதை வாங்க நினைக்கும் கும்பல் என திரைக்கதை விரிந்ததும், பரபரக்கும் த்ரில்லர் எபெக்ட் வந்துவிடுகிறது. அது, கூடவே எதிர்பார்ப்பையும் கொண்டு வந்துவிடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts