Skip to main content

Featured

‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயன்தாரா!

சென்னை : தன்னைப் பற்றியும் தனது கணவர் விக்னேஷ் சிவன் பற்றியும் சமூக வலைதளங்களில் பரவிய ‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா முற்றுப் புள்ளி வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் என்ற பெயரில் ஒரு புகைப்படம் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சந்திரமுகி 2’ முதல் சிங்கிள் எப்போது?

சென்னை: பி.வாசுவின் 65வது படமாக உருவாகி இருக்கிறது, 'சந்திரமுகி 2'. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே உட்படப் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். இதன் பின்னணி இசையை அவர் நேற்று தொடங்கியுள்ளார். இதன் முதல் பாடலை அடுத்த மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாடல் வெளியீட்டு விழாவைப் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments