Featured
- Get link
- X
- Other Apps
நடிகர் பவன் கல்யாணுக்கு நாசர் பதில்
சென்னை: தமிழ்த் திரையுலகில் தமிழ் நடிகர்களையும் தொழிலாளர் களையும்மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெஃப்சி அமைப்பு சமீபத்தில் புதிய விதியை அறிவித்திருந்தது. இதுபற்றி ‘ப்ரோ’படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ‘தமிழ்த் திரையுலகம் குறுகிய மனப்பான்மையில் இருந்துவெளிவரவேண்டும்’ எனக் கூறியிருந்தார். அவர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவர் நாசர் விளக்கம்அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள், தமிழ்த் திரையுலகில் பணிபுரியஅனுமதிக்கப்பட மாட்டார்கள் எனஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தி. தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Stella Jean’s Haitian Olympic Uniforms Are Meant to Send a Message
- Get link
- X
- Other Apps
Polimoda Business Week: Connecting Talents With Companies
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment