Skip to main content

Featured

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழ்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது” - அபிஷேக் பச்சன் 

மும்பை: மும்பை போன்ற ஒரு நகரத்தில் குடும்பத்துடன் செலவிட குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது என்றும், தன் பெற்றோரை விட்டு விட்டு தனியாக வாழ்வதை தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

‘பா’, ‘சமிதாப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி அடுத்ததாக ‘கூமர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அபிஷேக் பச்சன், சயாமி கெர் ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி நடித்துள்ள இப்படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (ஆக.18) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அபிஷேக் பச்சனிடம், இந்திய இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழ்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments