Skip to main content

Featured

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘புஷ்பா’வுக்கும் ‘ரெட் சாண்டல் வுட்’ படத்துக்கும் தொடர்பில்லை: இயக்குநர் குரு ராமானுஜம் உறுதி

சென்னை: ஜேஎன் சினிமாஸ் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம், ‘ரெட் சாண்டல் வுட்’. வெற்றி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். ‘கேஜிஎஃப்’ ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள குரு ராமானுஜம் கூறியதாவது:

2015-ல் செம்மரம் வெட்ட போனதாகச் சொல்லி திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் கதைப்படி, நாயகன் வெற்றி, கதாநாயகியின் அண்ணனைத் தேடி ரேணிகுண்டா செல்கிறார். செம்மரம் கடத்த வந்திருப்பதாகச் சொல்லி வனத்துறையால் அவர் கைது செய்யப்படுகிறார். அவருடன் மேலும் சில தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். அது தெரிய வராதபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களை என்கவுன்ட்டர் செய்ய சொன்னது யார்? சாதாரண சிறைத் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றத்துக்கு இந்தக் கொடூர தண்டனை ஏன்? என்பது கதை. இதற்கும் ‘புஷ்பா’ படத்துக்கும் தொடர்பில்லை. செப்.8 ம் தேதி படம் வெளியாகிறது. இவ்வாறு குரு ராமானுஜம் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments