Skip to main content

Featured

“பூபாள ராகம் பெத்து தந்த ஒரு கருவின் இசை என் தேசிய விருது” - ஸ்ரீகாந்த் தேவா சிறப்பு பேட்டி

'வாழ்த்துகள் சார்...' என்றவுடன் பெரும் புன்னகைகையைப் பரிசாகத் தந்து ‘வெற்றி... வெற்றி... ஜெயிக்கிறோம்!’ என்றபடி கையைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

தேசிய விருது பெற்றிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் கூறுவதற்காக தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சலிக்காமல் எடுத்துப் பேசிக்கொண்டே ‘மகிழ்ச்சி’ என்னும் இசையை தனது குரல் வழியே காற்றில் இசைத்து பரப்புகிறார். ஒரு அழைப்பில் கூட ;ஹலோ... ம் சொல்லுங்க' என்பது போன்ற எதார்த்த வார்த்தைகளே இல்லை. அத்தனைக்கும் பதிலாக எதிர்புறத்தில் இருப்பவர்களிடம் ‘வெற்றி... வெற்றி... ஜெயிக்கிறோம்!’ என்னும் நேர்மறை எண்ணத்தை மட்டுமே மந்திரமாக பிரபஞ்சத்தில் சிதறடிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts