Skip to main content

Featured

திரை விமர்சனம்: கிங் ஆஃப் கொத்தா

ரவுடிகள் ஆட்டிப்படைக்கும் கொத்தை என்ற ஊருக்கு வருகிறார், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரி ஷாகுல் (பிரசன்னா). அங்கிருக்கும் பிரபல கேங்ஸ்டர் கண்ணன் பாயை (ஷபீர் கல்லாரக்கல்) ‘அவன் ரொம்ப மோசமானவன்’ என்கிறார்கள் போலீஸார். ‘யாராக இருந்தாலும் பார்க்கலாம்’ என்று அவன் இடத்துக்கே சென்று மிரட்டுகிறார் ஷாகுல். போன பிறகுதான் தெரிகிறது, நிஜமாகவே மோசமானவன் என்று. அதிர்ச்சி அடையும் ஷாகுலுக்கு, கொத்தையில் ஏற்கெனவே ‘நல்ல’ தாதாவாக இருந்த ராஜு பாய் (துல்கர் சல்மான்) பற்றி தெரியவருகிறது. முள்ளை முள்ளால் எடுக்கத் திட்டமிடுகிறார் ஷாகுல். அவர் திட்டம் நிறைவேறியதா? கண்ணன் பாய்க்கும் ராஜு பாய்க்கும் என்ன தொடர்பு? அவரை ராஜு எப்படி முடிக்கிறார் என்பதுதான் படம்.

பான்- இந்தியா ஆசையில், பழைய ‘மாஸ் ஆக்‌ஷன்’பார்முலா கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி. ஒரு கேங்ஸ்டர் கதையில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் அச்சுப் பிசகாமல் அப்படியே இருக்கிறது இதிலும். சில காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும் அடுத்தது இதுதான் என்பதை எளிதாக கணித்துவிட முடிகிற பலவீனமான திரைக்கதை படத்தின் பெருங்குறை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts