Skip to main content

Featured

கிங் ஆஃப் கொத்தா Review: மலையாள சினிமா போட்டுக்கொண்ட ‘பான் இந்தியா’ சூடு

சமீப ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா தொடங்கி இந்தி சினிமா வரை பீடித்துள்ள பான் இந்தியா மோகத்துக்கு, இயல்பான திரைப்படங்களை வழங்கி வந்த மலையாள திரையுலகமும் தப்பவில்லை. தொடங்கப்பட்டது முதலே ‘பான் இந்தியா’ படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் எப்படி? - வாருங்கள் அலசுவோம்.

கேரளாவின் குற்றத் தலைநகரமாக கருதப்படும் ‘கொத்தா’ என்ற நகரத்தில் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் ராஜு (துல்கர் சல்மான்) மற்றும் கண்ணன் (சபீர் கல்லரக்கல்). தன் நண்பர்களுடன் சேர்ந்து கொத்தா நகரத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜு. தன் காதலியான தாராவின் (ஐஸ்வர்யா லட்சுமி) தம்பி கஞ்சாவுக்கு அடிமையாகி இறந்து போனதால் தான் செய்து கஞ்சா பிசினஸுக்கு மட்டும் தடை போடுகிறார் ராஜு. நண்பனுக்கு தெரியாமல் தங்கள் எதிரியான ரஞ்சித்துடன் (செம்பன் வினோத்) சேர்ந்து கொண்டு கஞ்சா வியாபாரத்தை தொடங்க முயல்கிறார் கண்ணன். இது தெரிந்து ராஜு, கண்ணனை கடுமையாக தாக்கி விட்டு விரக்தியில் ஊரை விட்டே சென்று விடுகிறார். அதன் பிறகு கொத்தாவில் மிகப் பெரிய கேங்ஸ்டராக மாறி அட்டூழியம் செய்கிறார் கண்ணன். அவரது அராஜகங்களை பொறுக்க முடியாத சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷாஹுல் (பிரசன்னா) உ.பி.யில் இருக்கும் ராஜுவை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கொத்தாவுக்கு வரவைக்க முயற்சிக்கிறார். ராஜு மீண்டும் வந்தாரா? கண்ணனின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்ததா? - இதுதான் ‘கிங் ஆஃப் கொத்தா’ சொல்லும் திரைக்கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts