Skip to main content

Featured

மலையாள நடிகை அபர்ணா நாயர் மரணம்: போலீஸ் விசாரணை

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 33. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடிகை அபர்ணா நாயர் மலையாள சீரியல் நடிகையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம் பதித்தவராவார். இவருக்கு சஞ்சித் என்ற கணவரும், இரண்டு மகள்களும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts