Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாதுகாவலர்களை நியமிக்க ஸ்ருதி ஹாசன் திட்டம்

சென்னை: பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசனை, அடையாளம் தெரியாத ஒருவர் பின் தொடர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, ‘யார் நீங்கள், எதற்காக என்னைப் பின் தொடர்கிறீர்கள்?’என்று கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசனிடம் இதுபற்றி கேட்டபோது, “நான் விமான நிலையத்தில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு மனிதர் என்னைப் பின் தொடர்ந்தார். அவர் அங்கிருந்த புகைப்படக்காரரின் நண்பராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் மிகவும் நெருங்கி வந்ததால் அசவுகரியமாக உணர்ந்தேன். நான் எனக்குப் பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதில்லை. எனக்கு அதில் விருப்பமில்லை. முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments