Skip to main content

Featured

த்ரில்லராக உருவாகியுள்ள ‘மாயக்கூத்து’!

அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள சுயாதீன படம், ‘மாயக்கூத்து’. டெல்லி கணேஷ், மு.ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா என பலர் நடித்துள்ளனர். ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டும் இந்தப் படம், கற்பனை கலந்த த்ரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூதாட்ட செயலியில் இருந்து 6 முறை என்னை தொடர்பு கொண்டார்கள்: கங்கனா தகவல்

மும்பை: சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகரும் அவர் நண்பர் ரவி உப்பாலும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ்செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில், துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில் பெரும்பாலான இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments