Skip to main content

Featured

‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி? - சூர்யாவின் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? - ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யா, கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ஆக்‌ஷன், ரொமான்ஸ், எண்டெர்டெய்ன்மெண்ட் என ஒரு முழு பேக்கேஜை தருவார் என்று நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். அல்ஃபோன்ஸ் புத்திரனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் இருக்கும் அதிரடி இல்லாமல் சற்றே வித்தியாசமான பாணியில், அதே நேரத்தில் சுவாரஸ்யம் குறையாத வகையிலும் இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூதாட்ட செயலியில் இருந்து 6 முறை என்னை தொடர்பு கொண்டார்கள்: கங்கனா தகவல்

மும்பை: சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகரும் அவர் நண்பர் ரவி உப்பாலும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ்செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில், துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில் பெரும்பாலான இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments