Skip to main content

Featured

‘லியோ’ படத்தில் பணியாற்றிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகாருக்கு பெப்சி மறுப்பு

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்திருந்தனர். இந்த நிலையில் அதனை மறுத்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி). இது தொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“லியோ திரைப்படத்தில் உறுப்பினர்கள் அல்லாத 1400 பேரை கொண்டு சென்னை பனையூரில் உள்ள ‘ஆதி ஸ்ரீராம்’ ஸ்டுடியோஸில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750 வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts