Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’

இயக்குநர் பாரதிராஜாவின் பள்ளி பல ‘டிரெண்ட்ஷெட்டர்’ இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறது. அதில் ஒருவர் மணிவண்ணன். ‘நிழல்கள்’மூலம் கதை, வசனகர்த்தாவாக மாறிய அவர், இயக்குநராக அறிமுகமான படம், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. இந்தப் படம் இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா.

தனது மகள் அருக்காணி (சுஹாசினி)மாப்பிள்ளைக் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்துஅப்பா, நகரத்தில் வசிக்கும் தனது பிராயத்து நண்பனை எதிர்பார்க்காமல் சந்திக்கிறார். ‘உன் மகளை,என் மகன் முரளி (மோகன்) திருமணம்செய்து கொள்வான்’என்கிறார் நண்பர். முதலில் மறுக்கும் முரளி, பெற்றோருக்காக அழகில்லாத அருக்கணியைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு அலுவலக நிகழ்வு ஒன்றில் ராதாவை சந்திக்கக் கண்டதும் காதல் வருகிறது. அவளுக்காவே பெங்களூரு கிளைக்கு மாறிச் செல்லும் முரளி, ராதாவை காதலித்து, திருமணம் செய்துகொள்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments