Skip to main content

Featured

எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’

இயக்குநர் பாரதிராஜாவின் பள்ளி பல ‘டிரெண்ட்ஷெட்டர்’ இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறது. அதில் ஒருவர் மணிவண்ணன். ‘நிழல்கள்’மூலம் கதை, வசனகர்த்தாவாக மாறிய அவர், இயக்குநராக அறிமுகமான படம், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. இந்தப் படம் இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா.

தனது மகள் அருக்காணி (சுஹாசினி)மாப்பிள்ளைக் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்துஅப்பா, நகரத்தில் வசிக்கும் தனது பிராயத்து நண்பனை எதிர்பார்க்காமல் சந்திக்கிறார். ‘உன் மகளை,என் மகன் முரளி (மோகன்) திருமணம்செய்து கொள்வான்’என்கிறார் நண்பர். முதலில் மறுக்கும் முரளி, பெற்றோருக்காக அழகில்லாத அருக்கணியைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு அலுவலக நிகழ்வு ஒன்றில் ராதாவை சந்திக்கக் கண்டதும் காதல் வருகிறது. அவளுக்காவே பெங்களூரு கிளைக்கு மாறிச் செல்லும் முரளி, ராதாவை காதலித்து, திருமணம் செய்துகொள்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts