Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பராசக்தி: சிவாஜி கணேசனின் திரையுலக சக்சஸ்

சிவாஜி கணேசன் என்கிற மகா கலைஞனை அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘பராசக்தி’. தமிழில் சரித்திர, புராணக் கதைகள் மட்டுமே அதிகம் படமாக்கப்பட்டு வந்த காலத்தில், தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றிய படம், இது.

1950-களில் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’, டி.எஸ்.நடராஜனின் ‘என் தங்கை’ நாடகங்கள் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்தன. இரண்டும் தங்கை பற்றிய கதையை கொண்டது என்பதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்க முயற்சி செய்தது, கோவை சென்டரல் ஸ்டூடியோஸ் நிறுவனம். பாலசுந்தரத்துக்கு இதில்விருப்பமில்லாததால் வேறொரு தயாரிப்பாளரிடம் பராசக்தி நாடகத்தின் உரிமையை விற்றுவிட்டார். எம்.ஜி.ஆர் நடிப்பில் ‘என் தங்கை’ அதே பெயரில் படமாக உருவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments