Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு சுதந்திரம் அடைந்ததும் வெளியான ‘விசித்திர வனிதா’

தமிழ் சினிமா தொடங்கிய முதல் 10 வருடங்களில், படம் இயக்கிய, திரைக்கதை எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில இலக்கியங்களை அதிகம் படித்தவர்கள். அதனால் ஆங்கில நாடகம் மற்றும் நாவல்களைத் தமிழில் படமாக்கி வந்தனர். அப்படியொரு படம்தான், ‘விசித்திர வனிதா’.

ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ‘ஷி ஸ்டூப்ஸ் டு கான்குயர்’ (She Stoopsto Conquer) என்ற நகைச்சுவை நாடகத்தைத் தழுவி உருவான படம் இது. இதை இயக்கியவர், ‘தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று அழைக்கப்படும் கே.சுப்பிரமணியன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments